Skip to main content

மன்னார், பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் 14 நாட்களுக்கு முடப்பட்டுள்ளது!

Sep 13, 2020 218 views Posted By : YarlSri TV
Image

மன்னார், பிரதான ரயில் நிலையப் பகுதி கொரோனா பரவல் அச்சம் காரணமாக எதிர்வரும் 14 நாட்களுக்கு முடப்பட்டுள்ளது! 

இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதுடன் குறித்த ரயில் நிலைய ஊழியர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.



இவ்விடயம் குறித்து தெரியவருவதாவது, வவுனியா, பெரியகாடு இராணுவ புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச்சென்றவர் நேற்று மாலை மன்னார் செளத்பார் ரயில் நிலையப் பகுதியில்வைத்து இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.



இந்நிலையில் மன்னார் செளத்பார் ரயில் நிலையத்தைச் சூழவுள்ள பகுதியில் நடமாடித் திரிந்ததையடுத்து குறித்த ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து மன்னார் வரும் ரயில்களும் அங்கு தரித்து நிற்காமல் செல்வதற்கான ஏற்பாடுகளை ரயில் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை