இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள்!
Sep 09, 2020 273 views Posted By : YarlSri TV
இலங்கையில் குவைத் எண்ணெய் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள்!
குவைத்தில் இருந்து இந்தியாவுக்கு 2.70 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த பனாமா நாட்டை சேர்ந்த ‘நியூ டைமண்ட்’ என்ற சரக்கு கப்பல், கடந்த 3-ந்தேதி இலங்கை கடற்பகுதியில் வந்தபோது தீ விபத்துக்குள்ளானது. இதில் ஒரு மாலுமி பலியானார். 22 மாலுமிகளை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டது.
இதையடுத்து இலங்கை விடுத்த கோரிக்கையின் பேரில், எண்ணெய் கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய கடற்படையும் கை கோர்த்தது. இலங்கை மற்றும் இந்திய கடற்படைகளின் வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டதாக இலங்கை கடற்படை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இந்த நிலையில் எண்ணெய் கப்பலில் தற்போது மீண்டும் தீ பிடித்துள்ளது. கப்பலுக்குள் தொடர்ந்து தீயினால் ஏற்பட்ட உஷ்ணம் மற்றும் தீ பிழம்புகள் காரணமாக மீண்டும் தீப்பிடித்து உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதையடுத்து கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் இலங்கை மற்றும் இந்திய கடற்படைகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கப்பலில் தீ பரவல் மீண்டும் ஏற்படாத வகையில், ரசாயன தெளிப்பான்கள் மற்றும் நீர் பயன்படுத்தப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago