Skip to main content

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு: சந்தேகத்தில் இருவர் கைது!

Sep 05, 2020 331 views Posted By : YarlSri TV
Image

சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு: சந்தேகத்தில் இருவர் கைது! 

தபால்கந்தோர் வீதி சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த திருடர்கள் இலத்திரணியல் உபகரணங்கள் மற்றும் 3,000 ரூபா பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.



இந்த சம்பவம் நேற்று மதியம் 2:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்றுள்ள நேரம் பார்த்து இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது. 



இதன் போது இரண்டு பவர்பாங், ரேடியோ என்பனவும் திருடப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் பிரத்தியேகமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த 18 பவுண் தங்க நகை தெய்வாதீனமாக திருடர்களின் கண்ணில் இருந்து தப்பியுள்ளது.



இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சாவகச்சேரி பொலிஸார் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர்


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை