கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது!
Sep 04, 2020 320 views Posted By : YarlSri TV
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். குருங்குடி என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெடிவிபத்தில் கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வெடிவிபத்து நிகழ்ந்த கட்டடத்தில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. குருங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
வெடிவிபத்தில் இறந்த 5 பேரும் பெண்கள் என்றும், மேலும் 4 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறன் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கவலைக்கிடமான நிலையில் இருந்த 4 பெண்களில் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குருங்குடியில் நிகழ்ந்த விபத்தில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை உரிமையாளர் காந்திமதி உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கொரோனா பல நாடுகளில் உச்சம் தொடும் வேளையில், அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுகிறது.
-
இலங்கையை மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்ட மலேசிய அரசியல்வாதி:விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார்
-
சதொச நிறுவனத்துக்கு கொண்டுவரப்பட்ட சீனி முறைகேடாக விநியோகம் - பந்துல குணவர்த்தன
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago