Skip to main content

வங்கதேச தலைநகர் தாகா அருகே மசூதியில் 6 ஏசி வெடித்து 12 பேர் பலி!

Sep 06, 2020 221 views Posted By : YarlSri TV
Image

வங்கதேச தலைநகர் தாகா அருகே மசூதியில் 6 ஏசி வெடித்து 12 பேர் பலி! 

வங்கதேச தலைநகர் தாகா அருகே, நாராயண்கஞ்ச் நதிக்கரை துறைமுகம் உள்ளது. இதன் அருகே உள்ள மசூதியில் ேநற்று முன்தினம் இரவு வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மசூதி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்த தீயை அணைத்தனர். உள்ளே படுகாயங்களுடன் துடித்துக் கொண்டிருந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.



அன்றிரவே, சிறுவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். நேற்று காலை மேலும் 11 பேர் இறந்தனர். படுகாயமடைந்த 25 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடலில் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர் பிழைப்பது கடினம் என சந்தேகிக்கப்படுகிறது. மசூதியில் இருந்த 6 ஏசிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

15 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

15 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை