ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் பலி!
Sep 02, 2020 247 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 6 பேர் பலி!
ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.
ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. மேலும், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆப்கானிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.
பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் பக்டியா மாகாணம் ஹர்டீஸ் பகுதியில் அரசுப்படையினருக்கு சொந்தமான் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தின் நுழைவாயில் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வேகமாக வந்தது.
அந்த காரில் மொத்த 3 பயங்கரவாதிகள் இருந்தனர். சிறைச்சாலை அருகே வந்த உடன் 2 பயங்கரவாதிகள் காரில் இருந்து வெளியே குதித்தனர்.
எஞ்சிய 1 பயங்கரவாதி காரை வேகமாக இயக்கி ராணுவ தளத்தின் நுழைவாயிலில் மோதச்செய்தான். பின்னர் வெடிகுண்டுகள் நிரப்பிய அந்த காரையும் வெடிக்கச்செய்தான்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் காரில் இருந்த பயங்கரவாதி உடல் சிதறி உயிரிழந்தான். சில பாதுகாப்பு படையினரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, காரில் இருந்து குதித்த 2 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே சில நிமிடங்கள் சண்டை நீடித்தது. இறுதியாக 2 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனாலும், இந்த சண்டை மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். மேலும், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இதனால் இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 3 பேர், பயங்கரவாதிகள் 3 பேர் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago