மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
Sep 03, 2020 325 views Posted By : YarlSri TV
மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு இடையே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் அனைத்தும் செயல்பட்டு வந்த நிலையில் சென்னையில் கடந்த மாதம் 18ந்தேதி முதல் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
மேலும், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் சென்னையில் மட்டும் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி இருந்தது. சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால் மற்ற மாவட்டங்களை விட ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக மதுக்கடைகள் மூடப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி முதல் சென்னையில் உள்ள மதுக்கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மது விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெற வில்லை. பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டதால் விற்பனை குறைந்துள்ளது. தற்போது விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக விற்பனை ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒரு மணி நேரம் கூட்டப்பட்டிருப்பதால் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது வெளி மாநில மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை வரத்தொடங்கி உள்ளனர். இதனால் மது விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1442 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1442 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1442 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1442 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago