சீன சிப்பாயின் கல்லறையின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி, கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன PLA இழப்புகளைப் பற்றி பேசுகிறது..!
Aug 29, 2020 292 views Posted By : YarlSri TV
சீன சிப்பாயின் கல்லறையின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி, கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீன PLA இழப்புகளைப் பற்றி பேசுகிறது..!
கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் (Galwan Valley clash) கொல்லப்பட்ட ஒரு சீன சிப்பாயின் கல்லறை படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சீன சிப்பாயை அடையாளம் காணும் கல்லறையின் புகைப்படம் (Chinese soldier grave) ஒன்று சீன சமூக ஊடக மேடையில் பகிரப்பட்டுள்ளது. ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கு மோதலில் ஏற்பட்ட சீன உயிரிழப்புக்கும் இது முதல் சாத்தியமான சான்றாகும்.
சென் சியாங்ராங் என அடையாளம் காணப்பட்ட சிப்பாயின் கல்லறை பற்றி விரிவாக விவரிக்கும் ஒரு இராணுவ மன்றத்தில் படம் பகிரப்பட்டது. இந்த படத்தை பல ட்விட்டர் பயனர்கள் பரவலாக பகிர்ந்ததை தொடர்ந்து இந்தியாவில் கவனத்தை பெற்றது.
மாண்டரின் மொழியில் எழுதப்பட்ட அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது., "சென் சியாங்கிரோவின் கல்லறை. புஜியனின் பிங்னானில் இருந்து 69316 துருப்புக்களின் சிப்பாய். ஜூன் 2020 இல் இந்தியாவின் எல்லைப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் அவர் தனது உயிரைத் தியாகம் செய்தார், மேலும் மத்திய இராணுவ ஆணையத்தால் மரணத்திற்குப் பின் எழுப்பபட்ட நினைவு சின்னம். KIA ஆக இருந்த சிப்பாய் டிசம்பர் 2001-ல் பிறந்தார், இவருக்கு வெறும் 19 வயது தான்" என்றும் கல்லறை கூறுகிறது.
கல்லறையின் புகைப்படத்தை பகிர்ந்த சீன சிப்பாய் சீனாவின் ஜி ஜின்பிங் அரசாங்கத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை, சீன அரசாங்கத்திடமிருந்தோ அல்லது இராணுவத்தினரிடமிருந்தோ கல்லறை இருப்பதாகக் கூறப்படும் எந்தவொரு பதிலும் வரவில்லை, அதன் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
16 பீகார் காலாட்படை படைப்பிரிவின் கமாண்டிங் அதிகாரி கர்னல் பி சந்தோஷ் பாபு உட்பட குறைந்தது 20 இந்திய வீரர்கள் PLA-யில் பதுங்கியிருந்து உயிர் இழந்தனர். கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா மோதல் மே மாத தொடக்கத்தில் தொடங்கியது, இரு தரப்பினருக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் இரு தரப்பிலும் கடும் அணிதிரட்டலுடன் முட்டுக்கட்டை தொடர்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago