Skip to main content

மத்திய அரசு அதிக அளவில் செலவழிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

Aug 27, 2020 314 views Posted By : YarlSri TV
Image

மத்திய அரசு அதிக அளவில் செலவழிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 

கரோனா நோய்த்தொற்று சூழலால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மத்திய அரசு அதிக அளவில் செலவழிக்க வேண்டுமே தவிர, கடனளிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.



கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. இத்தகைய சூழலில் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட ஆண்டறிக்கையில், ‘மக்களின் தேவை இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு சில மாதங்கள் ஆகும். நடப்பு நிதியாண்டில் மக்களின் நுகா்வு பெருமளவில் குறையும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இந்நிலையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த பல மாதங்களாக நான் தெரிவித்து வந்த கருத்தை ஆா்பிஐ உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசு அதிக அளவில் செலவிட வேண்டும்; கடனை அதிக அளவில் வழங்கக் கூடாது.



ஏழை மக்களுக்கு போதுமான பணத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்குவதில் கவனத்தை செலுத்தக் கூடாது. மக்களின் நுகா்வை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தை வளா்ச்சிப்பாதைக்குக் கொண்டுவருவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை