கையுறைகளை கழுவி விற்பனை செய்த கும்பல் சிக்கியது!
Aug 21, 2020 239 views Posted By : YarlSri TV
கையுறைகளை கழுவி விற்பனை செய்த கும்பல் சிக்கியது!
கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பதற்கு பொதுமக்கள் முக கவசம் மற்றும் கையுறைகளை பயன்படுத்தும்படி மருத்துவத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்துவதற்கு என வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக சர்ஜிக்கல் கையுறைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன்பின்னர் அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும்.
கையுறையின் வெளிப் பகுதியில் நோய் கிருமிகள் இருக்கலாம் என்பதால், அதில் கை வைக்காத வகையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கையுறைகள், முக கவசம் மற்றும் பிபிஇ உடைகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் சிலர் இந்த விதிமுறையை சரியாக பிற்பற்றுவதில்லை.
இந்த நிலையில், கொரோனா குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மும்பையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து விற்ற ஒரு கும்பலை கிரைம் பிராஞ்ச் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து, அதை சலவை செய்து மீண்டும் புதிது போலவே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது அந்த கும்பல். அவர்களிடம் இருந்து மூன்று டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட கையுறைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கர்நாடகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 3 மாத காலஅவகாசம் வழங்கப்பட்டது. அந்த கடன் தொகையை முழுமையாக செலுத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் எந்த தொழிலும் இல்லாத நிலையில் பொதுமக்கள், விவசாயிகள் எப்படி கடனை திருப்பி செலுத்துவார்கள். அதனால் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள உத்தரவை வாபஸ் பெற வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு துறை தொழிலாளர்களுக்கு ரூ.1,250 கோடி நிவாரண உதவி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதில் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.494 கோடி வழங்கப்படுகிறது. இந்த தொகை, அந்த தொழிலாளர்களின் நல வாரியத்தில் உள்ள நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு எந்த நிதிச்சுமையும் ஏற்படாது. அரசு தனது நிதியில் இருந்து நிவாரணமாக ரூ.617 கோடி மட்டுமே வழங்குகிறது. அண்டை மாநிலங்களை விட கர்நாடகத்தின் நிதி நிலை நன்றாக உள்ளதாக எடியூரப்பா கூறினார். அப்படி என்றால், அந்த மாநிலங்கள் வழங்கியுள்ள நிவாரண உதவிகளை விட அதிகமாக கர்நாடகம் வழங்க வேண்டும். பிரதமர் மோடியின் 7 ஆண்டுகால ஆட்சியின் சாதனை பூஜ்ஜியம். நாடு இருட்டில் சிக்கி தவிக்கிறது. மக்களின் கண்களில் கண்ணீர் வடிகிறது. பொய்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய தொழிற்சாலை பா.ஜனதா. 70 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு நிறுவப்பட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு விற்பனை செய்துவிட்டது. அதற்கு பதிலாக பொய் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். பிரதமர் மோடியின் ஆட்சியில் வளர்ச்சியில் நாடு வேகமாக பின்னோக்கி செல்கிறது. மத்திய பா.ஜனதா அரசின் 7 பெரிய பேரழிவு திட்டங்களால் நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதாவது, பண மதிப்பிழப்பு திட்டம், ஜி.எஸ்.டி., கொரோனா 2-வது அலை உருவாக காரணமாக இருந்தது, ஆயிரக்கணக்கான பிணங்கள் கங்கையில் மிதந்தது, விவசாய விரோன சட்டங்களை கொண்டு வந்தது, வேலையின்மை, நாட்டின் மதிப்புமிக்க பொதுத்துறை சொத்துகளை விற்பனை செய்தது, விலைவாசி உயர்வு போன்றவை ஆகும். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் திவாலாகி வருகின்றன. மாநிலங்கள் திவாலானால், நாடும் திவலானதாக அர்த்தம். சாமானிய குடும்பங்கள் கடந்த 2019-ம் ஆண்டு மாதம் ரூ.5 ஆயிரத்தில் குடும்பத்தை நடத்தின. ஆனால் இன்று அது ரூ.11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மக்களின் உழைப்பால் கிடைக்கும் பலன், அம்பானி, அதானிக்கு செல்கிறது. இவ்வாறு சித்தராமையா கூறினார்!
-
மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிரான போராட்டங்களில் 3 பேர் உயிரிழப்பு!
-
இலங்கையில் 5 தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் பெரும் துயரம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1463 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1463 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1463 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1463 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1463 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1463 Days ago