Skip to main content

கையுறைகளை கழுவி விற்பனை செய்த கும்பல் சிக்கியது!

Aug 21, 2020 239 views Posted By : YarlSri TV
Image

கையுறைகளை கழுவி விற்பனை செய்த கும்பல் சிக்கியது! 

கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பதற்கு பொதுமக்கள் முக கவசம் மற்றும் கையுறைகளை பயன்படுத்தும்படி மருத்துவத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இவற்றை பயன்படுத்துவதற்கு என வழிமுறைகள் உள்ளன. குறிப்பாக சர்ஜிக்கல் கையுறைகளை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதன்பின்னர் அதனை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். 



கையுறையின் வெளிப் பகுதியில் நோய் கிருமிகள் இருக்கலாம் என்பதால், அதில் கை வைக்காத வகையில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. கையுறைகள், முக கவசம் மற்றும் பிபிஇ உடைகளை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் சிலர் இந்த விதிமுறையை சரியாக பிற்பற்றுவதில்லை.



இந்த நிலையில், கொரோனா குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் மும்பையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நவி மும்பையில் பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து விற்ற ஒரு கும்பலை கிரைம் பிராஞ்ச் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். 



பயன்படுத்தப்பட்ட சர்ஜிக்கல் கையுறைகளை சேகரித்து, அதை சலவை செய்து மீண்டும் புதிது போலவே மாற்றி விற்பனை செய்து வந்துள்ளது அந்த கும்பல். அவர்களிடம் இருந்து மூன்று டன் அளவுக்கு பயன்படுத்தப்பட்ட கையுறைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Categories: இந்தியா
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை