விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையினை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் - சிவாஜி சூளுரை
Aug 25, 2020 341 views Posted By : YarlSri TV
விக்னேஸ்வரனின் பாராளுமன்ற உரையினை பாராளுமன்ற பதிவேட்டிலிருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் - சிவாஜி சூளுரை
தமிழ் மக்கள் தேசியகூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரன் பாராளுமன்ற முதல்நாள் அமர்வில் சத்திய பிரமாணம் மேற்கொண்டு சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரை கட்சித் தலைவர்கள் வாழ்த்தி உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை அந்த நேரத்தில் கௌரவ சி வி விக்னேஸ்வரன் ஆற்றிய உரை சிங்கள பௌத்த பேரினவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது
எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள் நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது குறிப்பாக 6 ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தான் சிங்கள மொழி உருவாகியது அத்தோடு அவர்களுடைய சிங்கள வரலாற்றினைக் கூறும் மகாவம்சம் கூட பாலி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது..
தமிழருக்கான வரலாறு தமிழ் மொழியில் எழுதப்படும் அது பின்னர் வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் தமிழ் மொழி தொன்மையான மொழி லட்சக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி தமிழ்மொழி காணப்படுகின்றது செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒரு மொழி என்று அங்கீகரிக்கப்பட்டபின்னர் உலகத்திலேபல நிறுவனங்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அது மூத்த குடிமக்களினுடைய தமிழ்மொழி என உரையாற்றியதும் கூக்குரலிடுவதும் பாராளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஒரு ஜனநாயக முறைக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்
நீங்கள் நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழி யாகவே தான் இருக்கும் அவ்வாறு இதை நீக்கினால் நாங்கள் சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்திடமும்அதேபோகொமென் வெல்த் பாராளுமன்றத்த ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம்என்றார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago