யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை - எஸ் செல்வரத்தினம்
Aug 24, 2020 266 views Posted By : YarlSri TV
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை - எஸ் செல்வரத்தினம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை என
யாழ் மாவட்ட கமக்கார அமைப்பு அதிகார சபையின் செயலாளர் எஸ் செல்வரத்தினம் தெரிவித்தார்
யாழ் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகளினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைப்பதில்லை அதேபோல உற்பத்திக்கு செலவு செய்யும் பணத்தை அவர்கள் விளைச்சலின் போது பெற்றுக்கொள்ள முடியாத நிலை யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்றது
இந்த விடயத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் எடுக்க வேண்டும் அதேபோல் விவசாயம் என்பது பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பு இவை இணைந்த ஒன்று
கால்நடைகளை பொருத்தவரைக்கும் கால்நடைகளுக்குரிய தீவனங்கள் பெறுவதில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன அதனை விவசாயிகள் தமது இடங்களில் பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் மேற்கொள்ள வேண்டும் அதேபோல் தீவனங்களை தவிர்த்து புல் வளர்ப்பு போன்ற செயற்திட்டங்களை கருத்தில் எடுப்பது மிகவும் சிறந்தது
அதேபோல் கோழி வளர்ப்புக்குரிய கோழிக்குஞ்சுகள் பெற்றுக் கொள்வதிலும் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள் தற்போது கோழி வளர்ப்பாளர்கள் அச்சுவேலியில் உள்ள பண்ணை ஒன்றிலேயே கோழிக்குஞ்சுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகின்றது
அதேபோல் பால் உற்பத்தியை எடுத்துக்கொண்டால் கால்நடைகளுக்கான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்குகின்றார்கள்.
இந்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து உரிய நடவடிக்கை எடுப்பார்களேயானால்விவசாயிகள் கால்நடை வளர்ப்பினை சிறப்பாக மேற்கொள்ள முடியும் எனினும் எமது விவசாயிகளுக்கு உள்ள முக்கியமான பிரச்சனை தற்போது உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு கிடைக்காமையினால் உற்பத்திக்கு செலவிடும் பணத்தினை விளைச்சலில் வரும் வருமானத்தில் ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக தற்போது நாட்டில் ஏற்பட்டகொரோணா இடர்காலகால சூழ்நிலை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்
இந்த புதிய அரசாங்கம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வடக்கில் விவசாயத்தினை மேலும் விருத்தி செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago