Skip to main content

காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது ; அமைச்சர் சரத் வீரசேகர..

Aug 14, 2020 282 views Posted By : YarlSri TV
Image

காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது ; அமைச்சர் சரத் வீரசேகர.. 

வடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் வய்ஸ் அட்மிரால்  சரத் வீரசேகர குறிப்பிட்டார்.



அமைச்சு பதவியை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.



வடக்குக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்க ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை எனவும் அது ஒருபோதும் இடம்பெறாது எனவும் அவர் கூறினார்.



13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக் கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுத்து வருகிறது.



வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், பொலிஸ் திணைக்களம் துண்டுகளாக பிளவுப்படும் அத்துடன் மாகாண பொலிஸ் மா அதிபர்கள் உருவாவார்கள் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை