2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்!
Aug 12, 2020 339 views Posted By : YarlSri TV
2 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு - எந்தெந்த நாடுகளில் பாதிப்பு அதிகம்!
சீனாவின் ஊஹான் நகரில் முதல்முதலாக கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ஆம் தேதி முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
நடப்பாண்டு மார்ச் 6-ஆம் தேதி 67-ஆவது நாளில் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது. அசுர வேகத்தில் பரவிய கொரோனா 94 நாட்களில் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்தது.
மே 20-ல் 142 நாட்களை கடந்த கொரோனா 50 லட்சம் பாதிப்புகளை எட்டியது. ஜூன் 27-ல் பாதிப்பு ஒரு கோடியை எட்டிய போது, 180 நாட்கள் ஆகியிருந்தது.
தற்போது 2 கோடியை கடந்துள்ள கொரோனா பாதிப்பு, அதற்கு எடுத்துக்கொண்ட காலம் 224 நாட்கள். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டுமே 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகளை கொண்ட இந்தியாவில், பாதிப்பு விகிதம் 11.07 சதவீதமாக உள்ளது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் மொத்தமாக 50 விழுக்காட்டிற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் 7,34,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 1,65,000 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் 52,000 பிரிட்டனில் 46,000 பேர் உயிரிழந்துள்ளனர். 5-வது இடத்தில் உள்ள இந்தியாவில் 44,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் இறப்பு விகிதம் 5.42 சதவீதமாக உள்ள நிலையில், அமெரிக்காவில் 3.18ஆகவும், பிரேசிலில் 3.33 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்து நாட்டில், கடந்த 100 நாட்களாக ஒரு பாதிப்பு கூட கண்டறியப்படவில்லை.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1506 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1506 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1506 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1507 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1507 Days ago