Skip to main content

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க தடை!

Aug 12, 2020 322 views Posted By : YarlSri TV
Image

கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க தடை! 

பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்களை தரை இறக்க, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.



கடந்த 7ம் தேதி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ், துபாயிலிருந்து 191 பேருடன் வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது.



இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், 2 விமானிகள், குழந்தை உட்பட 18 பலியாகினர்.



மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் 56 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.



இந்நிலையில், பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்க தடை விதித்து, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 



விமான விபத்தை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை