லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது
Jun 13, 2020 350 views Posted By : YarlSri TV
லா லிகா கிளப் கால்பந்து போட்டி 3 மாதங்களுக்கு பிறகு தொடங்கியுள்ளது
ஸ்பெயினில் புகழ்பெற்ற லாலிகா கால்பந்து தொடர் கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 10-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. அங்கு கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் லாலிகா போட்டியை தொடர்வதற்கு ஸ்பெயின் அரசு பச்சைகொடி காட்டியது. இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு லா லிகா கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. செவில்லி நகரில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் செவில்லா கிளப் 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் பீட்ஸ் அணியை தோற்கடித்தது. முதல் கோலை லுகாஸ் ஒகாம்போஸ் (56-வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தியும், 2-வது கோலை பெர்னாண்டோ தலையால் முட்டியும் அடித்தனர்.இந்த சீசனில் பங்கேற்றுள்ள 20 அணிகளில் பார்சிலோனா கிளப் 58 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல் மாட்ரிட் கிளப் 56 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. செவில்லா 28 ஆட்டங்களில் விளையாடி 14 வெற்றி, 8 டிரா, 6 தோல்வி என்று 50 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக் கிறது.லா லிகா கால்பந்து போட்டியில் இப்போதைக்கு ரசிகர்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செவில்லா- ரியல்பீட்ஸ் இடையிலான ஆட்டம் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் தான் நடந்தது. வழக்கமாக ரசிகர்களின் கரவொலி அரங்கையே அதிர வைக்கும். ஆனால் நிசப்தமான சூழலில் விளையாடியது வீரர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. முன்னதாக சுமார் 200 ரசிகர்கள் மைதானம் முன் திரண்டு இருந்தனர். அவர் களை போலீசார் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.லாலிகா தலைவர் ஜாவியர் டெபாஸ் கூறுகையில், ‘நாங்கள் மீண்டும் லாலிகா போட்டியில் விளையாடுவோம் என்று எப்போதும் நம்பினேன். அதன்படியே தொடங்கி விட்டோம். இந்த சீசன் ஜூலை 19-ந்தேதி நிறைவடைகிறது. உரிய பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடைசி கட்டத்தில் 10 முதல் 15 சதவீத ரசிகர்களை ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்’ என்றார். நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் நாளை களம் இறங்குகின்றன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1467 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1467 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1467 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1467 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago