கொழும்பில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி 79 இலட்சத்தை கொள்ளையிட்ட வைத்தியர்!
Jun 10, 2020 367 views Posted By : YarlSri TV
கொழும்பில் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி 79 இலட்சத்தை கொள்ளையிட்ட வைத்தியர்!
கொழும்பு தேசிய மருத்துவமனையில் கணக்கு பிரிவில் காசாளர் ஒருவரிடம் விளையாட்டு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி 79 இலட்சத்திற்கும் அதிகளவான பணத்தினை கொள்ளையிட்டு சென்ற வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேசிய மருத்துவமனையின் பண்டாரநாயக்க கட்டிடத்தில் உள்ள பண வைப்பு பெட்டக பகுதிக்கு பிரவேசித்த குறித்த வைத்தியர், மருத்துவமனையின் பணியாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவு, வேதனம் என்பவற்றுக்காக செலுத்தப்படவிருந்த பணத்தினை இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றார்.
பின்னர் முச்சக்கரவண்டியொன்றில் அவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான வைத்தியர் ஹொரணை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
வேறு ஒரு மருத்துவமனையில் சேவை புரியும் குறித்த வைத்தியர், பயிற்சிகளுக்காக தேசிய மருத்துவமனைக்கு சென்ற சமயத்திலேயே கொள்ளையிலீடுபட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1471 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1471 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1471 Days ago