சாதி ரீதியாக தான் செய்த விமர்சனத்துக்கு, யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்.
Jun 06, 2020 275 views Posted By : YarlSri TV
சாதி ரீதியாக தான் செய்த விமர்சனத்துக்கு, யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிடும் ‘டிக்டாக்‘ வீடியோக்கள் குறித்து யுவராஜ்சிங் கிண்டல் செய்துள்ளார். அத்துடன் அந்த உரையாடலின் போது வடமாநிலத்தில் குறிப்பிட்ட இன மக்களை குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தி யுவராஜ்சிங், சாஹலை விமர்சித்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறியது. இந்த பேச்சு யுஸ்வேந்திர சாஹல் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதால் யுவராஜ்சிங் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹன்சி போலீஸ் நிலையத்தில் தலித் உரிமைகள் ஆர்வலரான வக்கீல் ரஜத் கல்சன் என்பவர் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் சாதிய ரீதியான சர்ச்சை குறித்து யுவராஜ்சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘சாதி, நிறம், மதம் மற்றும் பாலினம் உள்பட எந்தவகையான ஏற்றத்தாழ்வுகளையும் நான் ஒருபோதும் நம்புவது கிடையாது. என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக கொடுத்துள்ளேன். தொடர்ந்து மக்களின் நலனுக்காக வாழ்வேன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள சுயமரியாதையை நான் நம்புகிறேன். யாரையும் ஒதுக்காமல் அனைத்து மக்களையும் மதிக்கிறேன். நான் எனது நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு இருந்த போது நான் கூறிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக என்னுடைய பேச்சு யாருடைய உணர்வையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
3 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
3 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
3 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
3 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
3 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
3 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
6 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1481 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1481 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1481 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago