Skip to main content

எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....!

Jun 07, 2020 343 views Posted By : YarlSri TV
Image

எரிபொருளின் விலையில் ஏற்பட்டது மாற்றம்.....! 

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருந்ததனால் பல நாடுகள் முடக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.



தொழிற்சாலைகள் பல மூடப்பட்டிருந்தன. இந்தநிலையில் எரிபொருள் விலை சடுதியாக குறைந்திருந்தன.



இந்நிலையில் தற்போது பல நாடுகள் தமது கட்டுப்பாடுகளை தளர்த்தி பொது மக்களின் அன்றாடச் செயல்பாடுகளுக்கும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இடமளித்துள்ளன.



இதனையடுத்து, மசகு எண்ணெய் விலை தற்போது 38 டொலரில் இருந்து 42 டொலர் வரை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை