Skip to main content

தனிமை வார்டுகளாக மாறிய ரெயில் பெட்டிகள்

Jun 02, 2020 318 views Posted By : YarlSri TV
Image

தனிமை வார்டுகளாக மாறிய ரெயில் பெட்டிகள் 

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்களில் ஒன்றாக டெல்லி திகழ்கிறது. இங்கு ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.தொடர்ந்து பரவல் அதிகரித்து வருகிற நிலையில் கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ள ரெயில்பெட்டிகளை தந்து உதவ வேண்டும் என்று ரெயில்வேக்கு டெல்லி அரசு நேற்று முன்தினம் கடிதம் எழுதியது.அதைத் தொடர்ந்து 160 படுக்கைகளுடன் கொரோனா தனிமை வார்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ள 10 பெட்டிகள் டெல்லி சாகுர் பஸ்தி ரெயில் நிலையத்தின் பராமரிப்பு பணி நிலையத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பெட்டிகள், கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு 2 மாதங்களான நிலையில் இப்போது பயன்பாடுக்கு வரப்போகிறது. அந்த வகையில் நாட்டிலேயே ரெயில்பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக பயன்படுத்துகிற முதல் மாநிலம் என்ற பெயரை டெல்லி தட்டிச்செல்லும்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

7 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை