பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Jun 01, 2020 320 views Posted By : YarlSri TV
பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமுடக்கத்தால் கல்வியாண்டு தொடங்குவது தாமதமாகும் நிலையில் பெற்றோரிடம் பள்ளிக்கல்வித்துறை கருத்து கேட்கிறது. தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது.தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் போது, வழக்கமாக 210 நாட்கள் இயங்க வேண்டிய, பள்ளி வேலை நாட்களின் எண்ணிக்கையை குறையும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை அனுப்ப கூடிய மனநிலையில் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய சூழ்நிலை இருப்பதால் பெற்றோரிடம் கருத்து கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.மெட்ரிக் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ என பல்வேறு விதமான பள்ளிகளில் இருக்கக்கூடிய நிலையில் பெற்றோர்களுடைய கருத்துக்களை நேரடியாக தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் கூட ஜூலை மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும். எனவே மாநில அரசுகள் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகங்களிடம் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள் அதன் அடிப்படையிலான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago