Skip to main content

கடலிற்கு மீன்பிடிக்கச் சென்று உயிர்நீத்த இளைஞருக்கு அஞ்சலி...!

Jun 04, 2020 309 views Posted By : YarlSri TV
Image

கடலிற்கு மீன்பிடிக்கச் சென்று உயிர்நீத்த இளைஞருக்கு அஞ்சலி...! 

கடலிற்கு மீன்பிடிக்கச் சென்று உயிர்நீத்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தும்  முகமாக இன்று  (04) மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாது, துக்கம் அனுஸ்டித்ததுடன், கடற்றொழில் சங்கத்தின் கொடியையும் அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாசையூர் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், உயிர் நீத்த சக தொழிலாளருக்காக, அனைத்து தொழிலாளர்களும், தொழிலுக்குச் செல்லாது, சோக கீதம் இசைக்கவிட்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பாசையூரில் மீனவர்கள் வந்து மீன்கள் கொள்வனவு செய்வார்கள். மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமையினால், மீனவர்கள் திரும்பிச் சென்றதுடன், துக்கதினம் அனுஸ்டிப்பதை பார்த்து, மீனவர்களின் ஒற்றுமையை நெகிழ்ந்து சென்றுள்ளனர்.

மீனவ சமூகத்தின் இவ்வாறான சில செயற்பாடுகளினால் மனிதாபினமானம் எடுத்துக்காட்டப்படுகின்றதுடன், அவர்களின் ஒற்றுமையையும் எடுத்துக்காட்டுகின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை