யாழில் உணவருந்திக்கொண்டிருந்த 2 வயது சிறுமி கடத்தப்பட்டார்!
Jun 04, 2020 359 views Posted By : YarlSri TV
யாழில் உணவருந்திக்கொண்டிருந்த 2 வயது சிறுமி கடத்தப்பட்டார்!
யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் பகுதியில் இன்று இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த இரண்டு வயதுடைய ஆர்கலி என்ற சிறுமி கடத்தப்பட்டுள்ளதாக சிறுமியின் தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுமி உணவு அருந்திக்கொண்டிருந்தவேளை மின்சாரம் தடைப்பட்டதாகவும் அவ்வேளை சிறுமி அழுத சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை என்றும் சிலர் மதிலால் கடந்து சென்றதை பார்வையிட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை குறித்த சிறுமியின் தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும், சிறுமி தாயுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் தந்தை தரப்பினர் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் தாயார் தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1468 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1468 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1468 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1468 Days ago