Skip to main content

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.

May 29, 2020 328 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நடக்கும் மோதலால் பெரிய ஆபத்து வரப் போவதாக பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. 

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே இந்த மாத துவக்கத்தில் இருந்து பிரச்சினை நிலவி வருகிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. அதன் பின் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறியது.இதனால் இரண்டு எல்லையிலும் சீனா மற்றும் இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் காரணமாக தற்போது இரண்டு நாடுகளும் தங்கள் எல்லையில்  படைகளை குவித்து வருகிறது.அதுமட்டுமின்றி, போருக்கு தயாராக இருக்கும் படி தன் நாட்டு இராணுவத்திற்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்ததால், எப்போதும் வேண்டும் என்றாலும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து அருகில் இருக்கும் நாடான பாகிஸ்தான் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த பிரச்சினை குறித்து பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி, இந்த எல்லை பிரச்சினையை சீனா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயன்றது. ஆனால் இந்தியா இதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியா தொடர்ந்து அனுமதி இன்றி நேபாளம் அருகே கட்டுமான பணிகளை செய்தது.இதுதான் பிரச்சினைக்கு காரணம். அண்டை நாடுகளுக்கு எதிராக செயல்படுவதுதான் இந்தியாவின் வழக்கம்.அண்டை நாடுகளுடனான உறவு தொடர்பாக இந்தியாவிற்கு நல்ல கொள்கை கிடையாது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இப்படித்தான் இந்தியா பறித்தது.அங்கு அத்துமீறல்களை செய்யும் வகையில் இந்தியா இப்படி செய்து வருகிறது. ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படுத்த முயன்று இந்தியா தோல்வி அடைந்துள்ளது. பலுசிஸ்தான் மூலம் பாகிஸ்தான் உள்ளே கலகம் விளைவிக்க நினைத்தது.உலக நாடுகள் எல்லாம் இந்தியாவை தட்டி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.இது தான் அதற்கான நேரம். அதேபோல் இந்தியா நேபாளம் உடன் சண்டை போட்டு வருகிறது. தற்போது சீனாவுடனும் இந்தியா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.இது மிகவும் ஆபத்தான விஷயம். பெரிய ஆபத்து இதனால் வர போகிறது. ஆசியாவின் அமைதி இதனால் பாதிக்கும், என்று குரேஷி குறிப்பிட்டு இருக்கிறார்.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் இந்துத்துவா ஆதிக்கம் கொண்ட அரசு மோசமான ஆதிக்க கொள்கை காரணமாகவும், நாசி செயல்பாட்டின் காரணமாகவும் அண்டை நாடுகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.குடியுரிமை சட்டம் மூலம் வங்கதேசத்தை இந்தியா சீண்டியது. லடாக் மூலம் நேபாளம், பாகிஸ்தான் , சீனாவை இந்தியா சீண்டி வருகிறது.காஷ்மீரில் இந்தியா ஆக்கிரமிப்புகளை செய்து வருகிறது. அதேபோல் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறி இந்தியா போர் குற்றங்களை செய்து வருகிறது.நான் ஏற்கனவே இது குறித்து எச்சரித்து இருக்கிறேன். பாசிச கொள்கை கொண்ட இந்திய அரசு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் பிரச்சனை கிடையாது.அவர் அண்டை நாடுகளுக்கும், பிராந்தியத்திற்கும் பெரிய பிரசசினையாக மாறுவார்கள், என்று இம்ரான் கான் கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

14 Hours ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

14 Hours ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

14 Hours ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

14 Hours ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

14 Hours ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

14 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

4 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை