கிளிநொச்சி செல்வா நகரில் வாள் வெட்டு....!
May 24, 2020 310 views Posted By : YarlSri TV
கிளிநொச்சி செல்வா நகரில் வாள் வெட்டு....!
கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை மாலை 30 வரையான ரௌடிக் கும்பல் ஒன்று வெறியாட்டம் ஆடியதில் இருவர் வாள் வெட்டுக்கு உள்ளாகியதோடு, சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
செல்வாநகர் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் உள்ள வீதியில் வசிக்கின்ற ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடுகளையடுத்து அவர் ரவுடிகளை வரவழைத்து அட்டக்காசம் புரிந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை 6.20 க்கு வந்தவர்கள் 7.15 வரை அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு வீடுகளில் இருந்து பெண்கள், சிறுவர்கள் அனைவரும் வயல்களுக்கு தப்பி ஓடிவிட்டதாகவும் இல்லையெனில் அவர்களும் வாள் வெட்டுக்கு உள்ளாகியிருப்பார்கள் என்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர்.
வாள் வெட்டுக்கு இலக்கானவர் உடனடியாக அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் வைத்தியசாலை பொலீஸார் வாக்குமூலத்தை பதிவு செய்து கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு வழங்கியதனை தொடர்ந்து கிளிநொச்சி பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுவரையும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1471 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1471 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1471 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1472 Days ago