Skip to main content

ஜனாதிபதிக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்! என கூறிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

May 20, 2020 289 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதிக்கு சல்யூட் அடிக்க மாட்டேன்! என கூறிய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 

பத்ரமுல்லையில் உள்ள படை வீரர்கள் நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கலந்துகொள்ள வைப்பதற்காக அரச தரப்பில் கடும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



குறிப்பாக அந்த நிகழ்வில் சரத் பொன்சேகா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சல்யூட் அடித்து மரியாதை வழங்கும் காட்சியை ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரம் செய்ய அரச தரப்பில் அக்கறை காட்டப்பட்டது என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டு அவர் நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்த அரச தரப்பில் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



எனினும் அவற்றிற்கு பொன்சேகா பதிலளிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.



பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பதிகாரியான ரொஹான் வெலிவிட்ட நேற்று முன்தினம் சரத் பொன்சேகாவை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். எனினும் அது பயனளிக்கவில்லை.



இது தொடர்பாக தனது அரசியல் நண்பர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா, பீல்ட் மார்ஷல் ஒருவர் ஒருபோதும் லெப்டினன்ட் கேர்ணல் ஒருவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தமாட்டார். நான் அந்த நிகழ்வுக்குச் செல்ல மாட்டேன் என்று கூறினார் என பொன்சேகாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.



கோட்டாபய ராஜபக்ச லெப்டினன்ட் கேர்ணல் தரத்திலிருந்தே ஓய்வு பெற்றார் என்பதும் அந்த தர நிலைக்கு அப்பால் கேர்ணல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல் நிலைகள் எல்லாம் தாண்டி பீல்ட் மார்ஷல் பட்டத்தை சரத் பொன்சேகா பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை