Skip to main content

Colombo19 ஊரடங்கு சட்டத்தை மீறிய 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

May 11, 2020 321 views Posted By : YarlSri TV
Image

Colombo19 ஊரடங்கு சட்டத்தை மீறிய 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்! 

Colombo19  ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 799 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இந்த காலப்பகுதியில் 206 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.



கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 51,552 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 13,350 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டது.



குறித்த பகுதிகளில் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை