வழமைக்கு திரும்புகிறது யாழ்ப்பாணம் -அரசாங்க அதிபர் அறிவிப்பு
May 09, 2020 382 views Posted By : YarlSri TV
வழமைக்கு திரும்புகிறது யாழ்ப்பாணம் -அரசாங்க அதிபர் அறிவிப்பு
எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாணம் வழமைக்குத் திரும்பும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்
எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ்ப்பாண நகரை வழமையான செயற்பாட்டுக்கு உட்படுத்துவது தொடர்பான விசேட கூட்டம் யாழ் மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் எதிர்வரும் திங்கள்கிழமையிலிருந்து யாழ் மாவட்டம் மீண்டும் வழமைக்குத் திரும்பவுள்ளது. அனைத்து செயற்பாடுகளும் வழமைபோன்று இடம்பெறும்.
எனினும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கு அமைய பொதுப்போக்குவரத்து, வர்த்தகர்கள் ,சிகை அலங்கரிப்பாளர்கள் , உணவக உரிமையாளர்கள் சுகாதார திணைக்களத்தினரின் சுகாதாரநடைமுறையை பின்பற்றி பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
யாழ் மாவட்டமானது வழமைக்குத் திரும்புகின்ற போதிலும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் நீங்கிவிடவில்லை.
எனவே மக்கள் இந்த விடயத்தில் அவதானமாக செயற்பட்டு அனாவசியமாக வீடுகளிலிருந்து வெளியே வராது தேவையான விடயங்களுக்கு மட்டும் வெளியில் வந்து தமது தேவைகள் முடிந்த பின்னர் வீடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அரசாங்கஅதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago