Skip to main content

ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர்!

Apr 19, 2020 347 views Posted By : YarlSri TV
Image

ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர்! 

லண்டன்: ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை அங்கு 96,228 ஆக அதிகரித்துள்ளது.



உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், ஐரோப்பியா கண்டத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 32,674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 10,29,214 ஆக அதிகரித்தது.



அதிகபட்சமாக ஸ்பெயினில் 1,90,839 (புதிதாக 5,891), இத்தாலியில் 1,72,434 (புதிதாக 3,493), பிரான்சில் 1,47,969 (புதிதாக 1,909), ஜெர்மனியில் 1,41,397 (புதிதாக 3,699), பிரிட்டனில் 1,08,692 (புதிதாக 5,599) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பியாவில் 4,004 பேர் பலியாகினர். இதனையடுத்து அங்கு மொத்த பலி 96,228 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக இத்தாலியில் 22,745 (புதிதாக 575), ஸ்பெயினில் 20,002 (புதிதாக 687) பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.



 


Image

Image

Categories:
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை