ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர்!
Apr 19, 2020 347 views Posted By : YarlSri TV
ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர்!
லண்டன்: ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 4,004 பேர் பலியாகினர். இதனையடுத்து மொத்த பலி எண்ணிக்கை அங்கு 96,228 ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகளை உலுக்கி கொண்டிருக்கும், கொரோனா வைரஸ், ஐரோப்பியா கண்டத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பாவில் நேற்று ஒரே நாளில் 32,674 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 10,29,214 ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக ஸ்பெயினில் 1,90,839 (புதிதாக 5,891), இத்தாலியில் 1,72,434 (புதிதாக 3,493), பிரான்சில் 1,47,969 (புதிதாக 1,909), ஜெர்மனியில் 1,41,397 (புதிதாக 3,699), பிரிட்டனில் 1,08,692 (புதிதாக 5,599) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஐரோப்பியாவில் 4,004 பேர் பலியாகினர். இதனையடுத்து அங்கு மொத்த பலி 96,228 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக இத்தாலியில் 22,745 (புதிதாக 575), ஸ்பெயினில் 20,002 (புதிதாக 687) பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago