Skip to main content

திருமலையில் கனமழை குளத்தின் வான் கதவுகள் திறப்பு விவசாயிகள் பாதிப்பு!

Jan 12, 2024 55 views Posted By : YarlSri TV
Image

திருமலையில் கனமழை குளத்தின் வான் கதவுகள் திறப்பு விவசாயிகள் பாதிப்பு! 

திருகோணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் காண மழை  காரணமாகவும் கந்தளாய்  குளத்தின் 10 வான் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது .



இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது .

கிண்ணியா பிரதேச செயலாளார் பிரிவுக்குட்பட்ட, வன்னியனார்மடு, புளியடிக்குடா முதலான பிரதேசங்களில்  செய்கை பண்ணப்பட்ட வயல் நிலங்களே  இவ்வாறு நீரில் மூழ்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .



இவ்வாறு செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்களே கந்தளாய் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.



பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செய்கை மேற்கொள்ளப்பட்ட  வயல் நிலங்கள்  இம்முறையும் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் .



கடன் வாங்கியே இம்முறை வேளாண்மை செய்தோம் எனவும் எங்களுக்கு இதற்குரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை