தொடருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்படுகின்றது!
Jan 07, 2024 26 views Posted By : YarlSri TV
தொடருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்படுகின்றது!
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான பகுதி இன்று (07) முதல் 6 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹவ முதல் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்கம் திருத்தப் பணிகள் காரணமாக மூடப்படவுள்ளதாக தொடருந்து திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே அறிவித்துள்ளார்.
பந்துல குணவர்தன தெரிவிக்கையில்
அதன்படி இன்று முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு தொடருந்து மார்க்கத்திற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மார்க்கத்தையும் இவ்வருடம் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் கீழ் மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய தொடருந்து சேவையையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago