காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்த நபர் !
Jan 07, 2024 31 views Posted By : YarlSri TV
காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்த நபர் !
காவல்துறை உத்தியோகத்தரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிவரை பிடிக்க தீவிர விசாரணை.
இந்தசம்பவம் நேற்று (6) இரவு 10.45 மணியளவில் சிலாபம் - புத்தளம் வீதியில் ஆராச்சிக்கட்டுவ - ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில் ,
காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை பிடிப்பதற்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் துரத்தி சென்றுள்ளனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் கையை கடித்து விட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தர் ஆராச்சிக்கட்டுவ காவல்துறை போக்குவரத்து பிரிவில் கடமையாற்றுபவர் ஆவார். பின்னர், அவர் சிலாபம் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1472 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1472 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1472 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1472 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1472 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago