விராட் கோலி முன்னாடி நீயெல்லாம் குழந்தை: 2023ல் தரமான சம்பவம்!
Dec 30, 2023 21 views Posted By : YarlSri TV
விராட் கோலி முன்னாடி நீயெல்லாம் குழந்தை: 2023ல் தரமான சம்பவம்!
நடப்பாண்டில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்தார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விடவும் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்
. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார் அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளை விடவும் ஒப்பிடும் போது, விராட் கோலி மிகச்சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது.
2023ல் மட்டும் விராட் கோலி 2048 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் 7வது முறையாக ஒரே ஆண்டில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற புதிய வரலாற்றை உருவாக்கினார். ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் சராசரி 72.47ஆகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 55.91ஆகவும், டி20 கிரிக்கெட்டில் 53.60ஆகவும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இடையே மறைமுக போட்டி நடப்பாண்டில் நடைபெற்றது. அதில் இந்திய அணிக்காக ஒரே ஆண்டில் யார் அதிக சதங்களை விளாசுகிறார்கள் என்ற போட்டி இருந்தது. அதில் இந்திய அணிக்காக சுப்மன் கில் 52 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 7 சதங்களையும், விராட் கோலி 36 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 8 சதங்களையும் விளாசி இருப்பது தெரிய வந்துள்ளது.
இரண்டரை ஆண்டுகளாக சதமே விளாச முடியாமல் தவித்து வந்த விராட் கோலி, ஒரே ஆண்டில் 8 சதங்களை விளாசி தள்ளியுள்ளார். அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 6 சதங்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதம் அடிக்கப்பட்டது.
அதேபோல் ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி 2 சதங்களை விளாசியுள்ளார். இதன் காரணமாக மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் உச்சத்தில் இருக்கும் வீரர் என்ற அந்தஸ்தை விராட் கோலி எட்டியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அபாரமான ஃபார்மில் இருப்பதால், மீண்டும் அவர் கைகளில் கேப்டன்சியை கொடுக்க வாய்ப்புள்ளதக பார்க்கப்படுகிறது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago