விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்: கனடாவில் சம்பவம்!
Dec 30, 2023 37 views Posted By : YarlSri TV
விமான விபத்தொன்றில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்: கனடாவில் சம்பவம்!
கனடாவில் விமான விபத்தில் சிக்கிய பயணிகள் 8 மற்றும் 2 விமானிகள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்தானது, கனடாவின் வடமேற்குப் பிராந்தியத்தின் யெலோனைப் பகுதியில் நடந்துள்ளது.
அத்தோடு, எயார் டின்டி விமான சேவைக்கு சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிய வருகின்றது .
மீட்பு நடவடிக்கை
இந்நிலையில், விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, விபத்து குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடன் செயற்பட்டு, விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன், விபத்தினால் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்தானது, விமானத்தை தரையிறக்குவதற்கு தாயாராகும் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago