Skip to main content

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்!

Dec 29, 2023 36 views Posted By : YarlSri TV
Image

புத்தாண்டு கொண்டாட்டங்களை தடைசெய்த தென்னாசிய நாடு! வெளியான காரணம்! 

 



இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை பாகிஸ்தான் அரசு முற்றிலும் தடைசெய்வதாக,அந்நாட்டு பிரதமர் அன்வருல் ஹக் கக்கர் அறிவித்துள்ளார் .



 பிரதமர் கருத்து தெரிவிக்கையில்,



'போரின் காரணமாக நமது சகோதர சகோதரிகள் தொடர்ந்து உயிரிழக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு நம் ஆதரவைத் தெரிவிக்க வேண்டும்





வன்முறையில் ஈடுபடுகிறார்கள்

அதனால்,எதிர்வரும் புத்தாண்டு கொண்டாட்டங்களைத் தடை செய்ய அரசு முடிவு செய்துள்ளது' எனத் தெரிவித்தார்.



மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெறுகின்ற இந்தப் போரில் இஸ்ரேல் மனிதாபிமானமின்றி வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும்,



எல்லை மீறி செயற்படுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மூன்றாவது முறையும் உதவி

இந்தப் போரினால் இதுவரை 9,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .



பாகிஸ்தான் மட்டுமல்லாமல், மொத்த இஸ்லாமிய உலகமும், குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதையும், ஆயுதமேந்தாத பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதையும் கண்டு சகிக்க முடியாத வேதனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.



பாகிஸ்தான் இதுவரை இரண்டுமுறை மனிதநேய உதவிகளை காசாவிற்கு அனுப்பியுள்ளது, மூன்றாவது முறை உதவிகளை அனுப்பவுள்ளது என்பதையும் அவர் தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை