Skip to main content

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் - அதிர்ச்சி தகவல்..!

Feb 07, 2024 53 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் - அதிர்ச்சி தகவல்..! 

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்துள்ளது .



இதனால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். 



 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு  தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.



 பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கும் காலை பத்து மணிக்கு முன் எரிபொருளை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர் 



துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருவதால், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக எரிபொருளை வைப்பு செய்வது சிரமமாக இருப்பதால், விநியோகஸ்தர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளனர்.



ஆனால் இதுவரை கூட்டுத்தாபனததினால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

19 Hours ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

19 Hours ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை