Skip to main content

அனுமதி இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது

Oct 08, 2023 53 views Posted By : YarlSri TV
Image

அனுமதி இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது 

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கடந்த 05/10/2023 இரவு வேளையில் அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை பிடித்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.



நாகர்கோவில் கடற்பரப்பில் வைத்து மூன்று டிங்கி படகுகளுடன் இவர்களை கைது செய்ததாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது



கைது செய்யப்பட்டவர்கள் உடமைகளுடன் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை