வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு
Oct 01, 2023 26 views Posted By : YarlSri TV
வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஊடகவியாளர், (Photojournalist) ஒருவர் தான் இரணைமடுவிற்கு செல்வதை கடற்படையினர் தடுத்துவருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கைக்கு நான் ஊடக பணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன். இரணைதீவிற்கு ஊடக படப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும் முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர்.
நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன்.
டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர் என்னை கேட்டுக்கொண்டனர்.
நான் முழங்காவிலிற்கு காலை 7.15 க்கு வந்து சேர்ந்தேன் - தற்போது 12 மணியாகிவிட்டது
நான் குறிப்பிட்ட அதிகாரிகளிற்கு பல மின்னஞ்சல்களை அனுப்பிவிட்டேன் அவர்கள் தொடர்ச்சியாக எனக்கு தவறான மின்னஞ்சல்களை அனுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago