தீயில் சிக்கி 100பேர் பலி
Sep 27, 2023 48 views Posted By : YarlSri TV
தீயில் சிக்கி 100பேர் பலி
ஈராக்கின் வட பகுதியில் திருமண வைபவமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், 150 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் புதுமணத் தம்பதியும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஈராக்கின் வடக்கே நினிவே மாகாணத்திலுள்ள அல் ஹம்டானியா மாவட்டத்திலேயே நேற்று(26) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.வாண வேடிக்கைக்காக பட்டாசுகள் பற்றவைக்கப்படும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமண மண்டபத்திலிருந்த தீப்பற்றக்கூடிய படலங்கள், தீ பரவ உதவியிருக்கலாமென அந்நாட்டு பொலிஸாரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago