Skip to main content

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி

Sep 26, 2023 34 views Posted By : YarlSri TV
Image

கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி 

தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின்  நிகழ்வுகள் சற்றுமுன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள  தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில்   ஆரம்பமாகியது.



தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தற்போது இடம்பெற்று வருகின்றது.



தியாதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமான நேரம் யாழில் கடும் மழை பொழிய ஆரம்பித்ததுடன் கடும் மழையினையும் பொருட்படுத்தாது பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் மக்கள் அணிதிரண்டு திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



திலீபனின் நினைவேந்தலை தழுவி இளைஞன் ஒருவன் தூக்குக்காவடி எடுத்து திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை