கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி
Sep 26, 2023 34 views Posted By : YarlSri TV
கொட்டும் மழையிலும் திலீபனுக்கு யாழில் அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் நிகழ்வுகள் சற்றுமுன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது.
தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தற்போது இடம்பெற்று வருகின்றது.
தியாதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமான நேரம் யாழில் கடும் மழை பொழிய ஆரம்பித்ததுடன் கடும் மழையினையும் பொருட்படுத்தாது பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் மக்கள் அணிதிரண்டு திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திலீபனின் நினைவேந்தலை தழுவி இளைஞன் ஒருவன் தூக்குக்காவடி எடுத்து திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1495 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1495 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1495 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago