Skip to main content

முக்கிய குற்றவாளி உயிரிழப்பு

Sep 20, 2023 23 views Posted By : YarlSri TV
Image

முக்கிய குற்றவாளி உயிரிழப்பு 

கொழும்பு, மாளிகாவத்தை  பகுதியில்  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த நபர் 20 நாட்களின் பின் இன்று உயிரிழந்துள்ளார்.



முதலாம் திகதி மாளிகாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இந்த நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்தார்.



'மாளிகாவத்தை பிரதீப்' என அழைக்கப்படும் 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.



இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினரும், போதைப்பொருள் கடத்தல்காரரான 'பஞ்சிகாவத்தே நெவில்' என்பவரின் சகாவும் ஆவார்.



மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியிருந்தனர்.



இந்தச் சம்பவம் தொடர்பில் 20 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை