Skip to main content

நீதிபதி இளஞ்செழியனின் தாயார் மரணம்

Sep 14, 2023 27 views Posted By : YarlSri TV
Image

நீதிபதி இளஞ்செழியனின் தாயார் மரணம் 

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் கொழும்பு வீட்டில் வசித்து வந்த அவரது  தாயார் சிவபாக்கியம் மாணிக்கவாசகர் (வயது 86)  இன்று  காலை 7 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.



இவர் யாழ். வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் ஓய்வு பெற்ற அதிபர் ஆவார். மேலும் அவர் அதே பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராக 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பதுடன் காலம் சென்ற ஆசிரியர் மாணிக்கவாசகரின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது. 



 அவரின் உடல் நாளையும், நாளை மறுதினமும் கொழும்பு ஜெயரட்ணா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம்   கேணியடி கொக்குவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.



மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை அன்னாரது இறுதிக்கிரியைகள் நடைபெற்று   தகனக்கிரியைக்காக உடல் சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என உறவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை