கடந்த 24 மணிநேரத்தில் 2,121 பேர் கைது..! இன்றும் சுற்றிவளைப்பு.
Dec 18, 2023 31 views Posted By : YarlSri TV
கடந்த 24 மணிநேரத்தில் 2,121 பேர் கைது..! இன்றும் சுற்றிவளைப்பு.
கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 2,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இவர்களில் 12 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விஷேட பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 116 சந்தேக நபர்களும் இங்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
மேலும் பதில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்றும் இடம்பெறவுள்ளது.இந்த நடவடிக்கை நேற்று அதிகாலை 4 மணி முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 45 காவல்துறை பிரிவுகளில் சுற்றிவளைப்பு .
அதற்கான அனைத்து கண்காணிப்பு பணிகளையும் 9 பிரதி காவல்துறைமா அதிபர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 11 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய ஹசீஷ், கேரள கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago