Skip to main content

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு!

Dec 15, 2023 24 views Posted By : YarlSri TV
Image

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு! 

பாவற்குளத்தின் வான் கதவுகள் திறப்பு: நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை பயன்பாடுத்துவோருக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு 



வவுனியா, பாவற்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியை இரவு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 



வவுனியாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக  பாவற்குளம் நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் 4 கதவுகளும் 2 அடி விகிதம் திறக்கப்பட்டுள்ளது. 



எனவே நெளுக்குளம்- நேரியகுளம் வீதிப் போக்குவரத்து இன்று (14.12)  இரவு 8 மணி தொடக்கம் காலை 5 மணி வரை முற்றாக தடைப்பட்டுள்ளது.



தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைய வாய்ப்புள்ளது. 



இதன்காரணமாக, பாவற்குளத்தின்  4 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நேரியகுளம் ஊடான நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் நீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் குறித்த வீதியை பயன்படுத்துவதை நிறுத்தி மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை