கொக்குவில் மாணவனது மரணம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
Dec 13, 2023 26 views Posted By : YarlSri TV
கொக்குவில் மாணவனது மரணம் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!
அண்மைக்காலமாக கல்முனை பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர் மரணங்கள் தொடர்பாக புலனாய்வுகளையும் விசாரணைகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவானது மேற்கொண்டு வருகின்றது.
நடைபெற்று வந்த விடயங்களை முன்வைத்து பார்க்கின்ற போது சிறுவர் தடுப்பு முகாம் மற்றும் சிறுவர்களை கல்வி மற்றும் சமய கற்கைகளுக்காக தடுத்து வைத்துள்ள முறைமையையும் அந்நிலையங்களின் தராதரத்தையும் பரிசீலனை செய்து வருகின்றது.
இந்த வகையில் கொக்குவில் மாணவனது மரணம் தொடர்பாகவும் நிலையங்களை பரிசீலனை செய்யும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சிறுவர் தொடர்பான கடமைப்பாடுகளையும் பொறுப்புக்கள் தொடர்பாகவும் கண்டறிந்து ஒருநிலைப்படுத்துவதற்காக விசாரணை ஒன்று இன்று(13) புதன்கிழமை கல்முனை பிராந்திய காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
இதில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் ,மாவட்ட நன்னடத்தை அதிகாரி ,மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரி, சிறுவர் உரிமை பாதுகாப்பு உத்தியோகத்தர், பிராந்திய சுகாதார சேவை பணிமனை பொறுப்பதிகாரி (RDHS),பெண்கள் சிறுவர் பிரிவு (Kalmunai Head Quates police staion),ஆகிய தரப்பினரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த விசாரணையானது மரணமடைந்த சிறுவனின் தந்தையான நாராயண ஆனந்த தேவனின் முறைப்பாட்டிற்கமைய மேற்படி தரப்பினருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1490 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago