முன்னாள்போராளி கைதால் குழப்பம்!
Nov 27, 2023 40 views Posted By : YarlSri TV
முன்னாள்போராளி கைதால் குழப்பம்!
மெய்யானதலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகளை அகற்றமுற்ப்பட்ட முன்னாள் போராளி செ.அரவிந்தன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் பதாதைகள் மீளவும் வைக்கப்பட்டது.
வவுனியா தலைமைபொலிஸ்நிலையத்திற்கு மிக
அருகாமையில் தபால்நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மெ
குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால் முன்னாள் போராளியும் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை இங்கு யார் வைத்தது இதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கிருந்த இருவர் தாங்களே இதனை வைத்ததாகவும் இப்படி செய்யுமாறு சிலர் பணித்தமையால் இதனை செய்தோம்.அதனைவிட வேறு எதுவும் தமக்கு தெரியாது என்று கூறியதுடன், பதாதைகளையும் அகற்றினர்
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் பதாதைகளை வைத்தவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்காமல். முன்னாள் போராளியான அரவிந்தனை அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக கைதுசெய்து அழைத்துச்சென்றனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரவிந்தன்….
தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்ப்படுத்துவதற்காவே இந்த பதாதைகள் இங்குவைக்கப்பட்டுள்ளது. இதனை இராணுவமே ஒழுங்கமைத்துள்ளது. இந்த விடயத்தில் தலையிடவேண்டாம் என்று இராணுவ புலனாய்வுபிரிவின் மேயர் ஒருவர் வந்து தன்னைஅச்சுறுத்திச்சென்றதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த பகுதியில் செய்திசேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை பொலிசார் அச்சுறுத்தியதுடன், அவர்களது கடமையினை செய்யவிடாமல் இடையூறை ஏற்ப்படுத்தினர்.
அத்துடன் குழப்பநிலை முடிவிற்குவந்ததும் குறித்த பகுதியில் போக்குவரத்து பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களின் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago