Skip to main content

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது..! பாதுகாப்பு அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு

Nov 09, 2023 24 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது..! பாதுகாப்பு அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு  

சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் பொலிஸ் சீறுடை அணிந்துள்ளவர்கள் அவரவர் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார் 



நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன பெனிபிட்டிய முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில்  அவர்  இவ்வாறு குறிப்பிட்டார்.



இதன்போது அவர்   மேலும் கருத்து தெரிவிக்கையில் 



பாதாள குழுவின் செயற்பாடுகளையும், போதைப்பொருள் வியாபாரத்தையும் இல்லாதொழிக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 



இருப்பினும் பாதாள குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் பெறுபேற்றை வெகுவிரைவில் அறிந்துக் கொள்ள முடியும் எனவும். 



சிறைச்சாலைகளில் உள்ள நிலையில் போதைப்பொருள் வியாபாரத்தை முன்னெடுக்கும் தரப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள்  நீதியமைச்சருடன் கலந்துரையாடியுள்ளோம். போதைப்பொருள் ஒழிப்புக்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்கப்படுகின்றோம் 



அனைத்து   பொலிஸ் அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. சீறுடை அணிந்துள்ள பொலிஸார் தங்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 



பொலிஸ் சேவைக்கு வரும் போது அவர்களுக்கு அதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆகவே பொலிஸாருக்கு என்று பாதுகாப்பு வழங்க விசேட செயற்திட்டம் ஒன்றும்  வகுக்கப்படவில்லை என அவர்  குறிப்பிட்டார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை