பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற பதின்ம வயது மாணவர்கள்!! அதிபர் உட்பட பலர் கைது
Mar 15, 2023 68 views Posted By : YarlSri TV
பெண்கள் விடுதிக்குள் நுழைய முயன்ற பதின்ம வயது மாணவர்கள்!! அதிபர் உட்பட பலர் கைது
கண்டி தனியார் பாடசாலையொன்றில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட மாணவர்களே சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளனர் என்றும், கண்டி பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) இரவு பெண்கள் விடுதிக்குள் இரகசியமாக ஐந்து மாணவர்கள் நுழைந்ததாகவும் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கையின் போதே மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மாணவிகளின் சம்மதத்துடனேயே மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மாணவர்கள் தாக்குதலுக்கும் கொடுமைக்கும் ஆளாகியிருப்பதாகவும் அவர்களின் தலைமுடி கூட வெட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் விடுதி காப்பாளர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago