Skip to main content

மஹிந்த ராஜபக்ஸவின் மகனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Mar 10, 2023 75 views Posted By : YarlSri TV
Image

மஹிந்த ராஜபக்ஸவின் மகனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவின் கடனட்டையில் இருந்து 400 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



ரோஹிதவின் கடனட்டையில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி   மாத்தறைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.



இது தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு குறித்த வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை