அத்தை வீட்டுக்கு தனியாகச் சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்
Mar 03, 2023 73 views Posted By : YarlSri TV
அத்தை வீட்டுக்கு தனியாகச் சென்ற சிறுமிக்கு நடந்த விபரீதம்
அநுராதபுரம், பூஜா நகருக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய சிறுமியை வன்புணர்வு செய்த 19 வயது இளைஞன் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் தன்னாயம்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு அருகிலுள்ள அத்தையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னை யாருமற்ற வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மார்ச் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago